×

காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை.. நேதாஜி இல்லையென்றால் இந்தியா சுதந்திரமடைந்திருக்காது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய நபரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் மாணவர்களின் முன்னிலையில் பேசிய ஆளுநர் ரவி; காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை.

சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையின் கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்” என்று கூறியுள்ளார்.

 

The post காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை.. நேதாஜி இல்லையென்றால் இந்தியா சுதந்திரமடைந்திருக்காது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Gandhi ,India ,Netaji ,Governor RN ,Ravi ,Chennai ,Subhash Chandra Bose ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு